ச.ம.க. சார்பில் 300 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகள்: வடக்கு தொகுதி செயலாளர் எஸ்.பி.பிரகாஷ் வழங்கினார்

கொரோனா ஊரடங்கால் திருப்பூர் மாநகரம் முடக்கம் கண்டிருக்கும் நிலையில் திருப்பூர்  வடக்கு தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தினமும் அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஏ.டி.காலனி பகுதி பொதுமக்கள் 300 பேருக்கு ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை ச.ம.க., வடக்கு தொகுதி செயலாளர் எஸ்.பி.பிரகாஷ் வழங்கினார். செந்தில்,ஐயப்பன், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். 



 

Previous Post Next Post