தமிழகத்தில் இன்று 716 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 8 பேர் பலி

தமிழகத்தில் இன்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சென்னையில் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,718 ஆக உள்ளது. மொத்தம் 6,520 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா உடன் வேறு ஏதாவது ஒரு பாதிப்பு இருந்துள்ளது.



இன்று மட்டும் 11,788 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் இதுவரை  2,66,687 பேருக்கு பரிசோதனை  செய்யப்பட்டு உள்ளது.


 


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரங்களை இந்த பட்டியலில் காணலாம்:


இதுமட்டும் இல்லாமல் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.



 


Previous Post Next Post