பழனியில் இருபது ஊராட்சி ஒன்றியங்களுக்கு கிருமி நாசினி மருந்து, முககவசம், கையுறை, வழங்கப்பட்டது.
பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ஊராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு வழங்க இருபது ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி மருந்து, முக கவசம், சானிட்டைசர்களை கையுறை மற்றும் சோப்பு பழனி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், ஈஸ்வரி கருப்புசாமி,
துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்களான லதா, ரேணுகாதேவி, குமார வடிவேல், ஆசிய மரியம், பரமசிவம், செல்வி, மகாலட்சுமி, வனிதா, ரமேஷ், முத்து கவுண்டர், முனீஸ்வரி, வேதாச்சலம், மற்றும் பழனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், ஏழுமலை, ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு வட்டார வளர்ச்சி நிர்வாகம் சார்பில் அனைத்துப் பொருட்களையும் வழங்கினர். இதில் அனைத்து அதிகாரிகளும் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்