குடைப்பிடித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு -2 சார்பாக பல பகுதிகளில்  கொரோனா தடுப்பு விழிப்புணர்வினை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே இணயத்திலும், வாட்ஸ் அப்பிலும் குறும்படம் அனுப்பியும், போஸ்டர்ஸ் அனுப்பியும் விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகிறார்கள்.


 


இன்று 02.05.20 காவல் துறையினருடன் இணைந்து அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் அலகு -2 குழுவினர்கள் வித்தியாசமாக விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள். வடக்கு சரக காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன் நிகழ்சியினை துவக்கி வைத்தார்.



மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கிணங்க குடை பிடித்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே வரவேண்டும், குழந்தைகளை வெளியே அழைத்து வராதீர்கள் என்றும் ரோட்டில் எச்சில் துப்பக்கூடாது, தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது, அத்தியாவசப் பொருட்களை வீட்டின் அருகே வாங்கும் மாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


 


மேலும் மாநகராட்சி சார்பாக பழைய பஸ் நிலையத்தில் தற்காலியமாக இயங்கி வரும் காய்கறி சந்தையில் காய்கறி விற்பவர்கள் கட்டாயம் கை உறையும் முககவசமும் அணிந்திருக்க வேண்டும், காய்கறி வாங்க வருபவர்களை சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


இதில் அலகு -2 குழுவினர்கள் குடைகளை பிடித்து விழிப்புணர்வினை மேற்கொண்டதை காவல் உதவி ஆணையர் பாராட்டி வாழ்த்தினார். பிறகு அனைவருக்கும் கிருமி நாசினி கொடுத்தும், முககவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் கொடுத்தும், கை உறைகளை கொடுத்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.


Previous Post Next Post