லாக்டவுன் முடிஞ்சி பஸ் ஸ்டாண்ட காணோம்னு தேடாதீங்க... திருப்பூரில் எந்தெந்த பஸ் எங்க நிக்கும்... போலீஸ் கமிஷனர் தகவல்

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:



திருப்பூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் கட்டிடவேலை நடைபெறுவதால் பின்வருமாறு மாற்றுவழியில் வாகனங்கள் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கொடுமணல், குன்னத்தூர்,நம்பியூர், அவினாசி, கருமத்தம்பட்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளையம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், கருவலூர், சேவூர், சோமனூர், அய்யன்கோயில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச்செல்லும் நகரபேருந்துகள் அனைத்தும் வழக்கமான வழியில் பழைய பேருந்துநிலையம் வந்து செல்லும்.



பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம் மற்றும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் வந்து MO Junction, ABT Road, சந்தைபேட்டை வழியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்புறம் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படும்.


முதலிபாளையம், நாச்சிபாளையம், சிட்கோ , கொடுவாய், காசிபாளையம், படியூர், காங்கேயம், சிவன்மலை, அவிநாசிபாளையம், கொடுவாய், கோவில்வழி, அலகுமலை, பெருந்தொழுவு, கண்டியன்கோவில் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் அனைத்தும் பழைய GH எதிரில் உள்ள கல்யாணி பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தப்படும்.


கோவில்வழி பேருந்து நிலையம்:


1. உடுமலை, பொள்ளாச்சி, பழனி, தாராபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை, பெரியகுளம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், இராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் கோவில்வழி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும்.


புதிய பேருந்து நிலையம்:


1. கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுகோட்டை, நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு சென்று வரும் பேருந்துகள் அனைத்தும் காங்கேயம் ரோட்டில் நல்லூர், காசிபாளையம், கூலிபாளையம் நால்ரோடு, நெருப்பெருச்சல், பூலுவபட்டி வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைய வேண்டும்.


2. ஈரோடு மற்றும் சேலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாற்றப்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.


பொது அறிவிப்பு:


1. பழைய பேருந்து நிலையம் கட்டிட வேலை நடைபெறுவதால் தாராபுரம் ரோட்டிற்குச் செல்லும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. எனவே பல்லடம் ரோட்டிலிருந்து தாராபுரம் ரோடு மற்றும் காங்கேயம் ரோடு செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் சந்தைபேட்டையிலிருந்து வெள்ளியங்காடு வழியாகவோ அல்லது வீரபாண்டி பிரிவு வழியாகவோ தாராபுரம் ரோட்டை சென்றடைய வேண்டும்.


2. பழைய பேருந்து நிலையம் கட்டிட வேலை நடைபெறுவதால் கோட்டைமாரியம்மன் கோவிலிலிருந்து மாநகராட்சி வழியாக மங்களம் ரோடு செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கல்யாணி பெட்ரோல் பங்க் வழியாக பல்லடம் ரோடு சென்று TKT Show room அருகே U Turn செய்து பல்லடத்திலிருந்து திருப்பூர் நோக்கி வரும் சாலை வழியாக வந்து மேம்பாலம் ஏறி மாநகராட்சி வழியாக மங்களம் ரோடு செல்ல வேண்டும். பாலத்தின் கீழ் வாகனங்கள் எதுவும் செல்லகூடாது.


எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு திருப்பூர் மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 


Previous Post Next Post