பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததாக உறவினர்கள் போராட்டம்   

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

 

 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கேவிஆர் நகர் இரண்டாவது விதி பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டி மணியாள்  தம்பதியினர்.  இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமுடன் இருந்த நிலையில் நேற்று இரவு மணியாளுக்கு  வயிற்றுவலி ஏற்பட்டதோடு ரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளது ஆனால் பணியில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் செவிலியர்கள் மருத்துவம் செய்துள்ளனர் இது பலன் அளிக்காததால் நேற்று இரவு உயிரிழந்துள்ளார் . அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையில் செவிலியர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் மணியாள்  உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  அங்கு வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

Previous Post Next Post