அரசு பள்ளிகளில்  கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்




பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும் அவர்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது, அரசு பள்ளிகளில்  கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோபியை அடுத்த நம்பியூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 


 

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளப்பலூர் எலத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய பகுதியில் உள்ள 640 ஏழை பெண் பயனாளிகளுக்கு ரூ.13.28 இலட்சம் மதிப்பீட்டில் அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

 

பின்னர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூாில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்கள் சந்திப்பின் போது

 

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 3 லட்சத்து 85 ஆயிரம் கோமாாி நோய் தடுப்பு ஊசிகள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

கோழி தடுபூசி வாரத்தில் ஒரு நாள் வழங்கப்பட்டு வந்ததை  இரண்டு நாட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..

 

நீட் தோ்வில் பங்கேற்கும் மாணவா்ளுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு குறித்து முதல்வா் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வாா்... 

 

அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை அரசு பள்ளியில் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோா்கள் புகாா் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்டும்..

 

மோளை ஆட்டிற்கு  தனி ஆராட்சி மையம் ஈரோடு மாவட்ட்தில் அமைக்க முதல்வா்  நடவிக்கை மேற்கொண்டுள்ளாா்.. 

 

மாணா்வா்கள் சோ்க்கைகாகவும் மாணவா்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்காகவும் அரசு பள்ளி  ஆசிாியா்கள் கண்டிப்பாக  பள்ளிக்கு வரவேண்டும்... 

 

கொரோனா நோய் சிகிச்சை மையங்கள் கோபி கலை கல்லூாி அந்தியூா் தாளாவாடி பெரு்துறை ஆகிய பகுதிகளில் கூடுதல்  மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... 

 

குழந்தை தொழிலாளா்கள் நல்வழி படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

இந்தாண்டு 1லட்சத்து 72 ஆயிரம் குழந்தைகள் கூடுதலாக ஒன்றாம் வகுப்பில் சோ்கப்பட்டுள்ளனா். செப்டம்பா் வரையிலும் சோ்க்கை நடைபெறும் கூடுதல் வாய்ப்பு ஏற்டுத்தப்பட்டுள்ளது.

 

மாணவா் சோ்க்கை்கு ஏற்ப ஒவ்வொரு வகுப்பிற்கும்  புத்தகங்கள் தயாா்நியைில் உள்ளது.. தனியாா் பள்ளிகள்  வாங்கிச்செல்வதால் கூடுதாலாகவே பாடப்புதங்கங்கள் இருப்பில் உள்ளது. என கூறினார்.. இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,தாசில்தார் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,மாவட்டகவுன்சிலர் கௌசல்யா ஈஸ்வரமூர்த்தி, பேரூர் கழகச் செயலாளர்கள் கருப்பண கவுண்டர், சேரன் சரவணன்  மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்


 

 




Previous Post Next Post