பேர்ணாம்பட்டு ஒன்றியம் பத்தலப்பல்லி ஊராட்சியில் மனைவியை கொலை செய்த கணவன் கைது



பேர்ணாம்பட்டு ஒன்றியம், பத்தலப்பல்லி ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் யுவராஜி வயது 22. இவர் கட்டட தொழில் செய்து வருகிறார். அவருக்கும்  அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் வயது 19.கடந்த ஒன்பது மதங்கள் முன் திருமணம் நடைபெற்றது.


நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்த யுவராஜிக்கும் மனைவி சுப்புலட்சுமிக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பிறகு ஆத்திரமடைந்த கணவர் யுவராஜ் இரும்பு தடியால் தன் மனைவி சுப்புலட்சுமியை தாக்கியுள்ளார்.


பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பேர்ணாம்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி  யுவராஜ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Previous Post Next Post