தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய  காவல்துறையினருக்கு SP ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு


  

கடந்த 18.08.2020 அன்று பல கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி துரைமுத்து என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை கிராமத்தில்

 

சுற்றித் திரிவதாக கிடைத்த இரகசிய தகவலின் படி, தனிப்படையினர் மணக்கரை ஜங்ஷன் அருகில் ஒரு அறையில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்து மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களையும் பிடிக்க சென்ற போது,

 

தனிப்படையினரை தாக்க முயற்சி செய்து தப்பிக்கும் போது மூன்று நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ரவுடி துரைமுத்து மட்டும் அங்கிருந்த வல்லநாடு வனப்பகுதியில் தப்பி ஓடும் போது 

 

அவரை காவலர் சுப்பிரமணியன் துரத்தி சென்று பின் பக்கமாக பிடித்தபோது ரவுடி துரைமுத்து கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வீசியதில்,

 

காவலர் சுப்பிரமணியன் மீது வெடிகுண்டு வெடித்து தலைசிதைந்து சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். 

 

இதில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தார். ரவுடியை பிடிக்க உயிரையும் பணயம் வைத்து பணிபுரிந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப் பெருமாள்,

 

தலைமை காவலர்  குணசேகரன், குரும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வெங்கடாச்சல பெருமாள், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் வேம்புராஜ், 

 

செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆனந்தராஜ், ஏரல் காவல் நிலைய காவலர்  நாராயணசாமி, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர்  இளங்கோ ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

 

தூத்துக்குடி மத்தியபாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கடத்தல் வழக்கில், கடத்தப்பட்ட நபரான வெங்கடஷே என்பவரை கடத்தப்பட்ட 1 மணி நேரத்தில் மீட்பதற்கும்,

 

அவ்வழக்கின் எதிரிகளான காளிதாஸ் மற்றும் சீனிக்குட்டி ஆகியோரை கைது செய்வதற்கும் உதவியாக இருந்த புதியம்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ், 

 

தட்டப்பாறை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் விக்னேஷ் மற்றும் புதியம்புத்தூர் காவல் நிலைய காவலர்  சுடலைமுத்து ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

 

கடந்த 22.08.2020 அன்று கிடைத்த ரகசிய தகவலின்படி தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மாப்பிள்ளையூரணி பகுதியில்

 

இருசக்கர வாகனத்தில் வந்த தமிழ்ச்செல்வன் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் இருந்த சுமார் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா, தலைமை காவலர் மோகன் ஜோதி, காவலர் சிலம்பரசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

 

கடந்த 21.08.2020 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம், தண்ணீர் துறை பேருந்து நிறுத்தம் அருகில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக தக்க சமயத்தில் தகவல் தெரிவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுத்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ராஜேஷ் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

 

உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்று வழங்கி பாராட்டினார்.

Previous Post Next Post