திருநெல்வேலி மண்டல தொழிலாளர்கள் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முகக்கவசம் மற்றும் கையுறை


 

திருநெல்வேலி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந் தலைவருமான தச்சை கணேசராஜா தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல தொழிலாளர்கள் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 3 ஆயிரம் முகக்கவசம் மற்றும் கையுறைகளை தனது சொந்த செலவில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் கந்தசாமி பாண்டியன், பொருளாளர் பகவதி முருகன் மற்றும்

திருநெல்வேலி மண்டல தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Previous Post Next Post