மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம் - கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி.!


தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமே சேர்ந்த நிர்வாகிகள் இன்று

தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பியை சந்தித்து தங்களின் அடிப்படை வசதி மற்றும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு திமுக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரும் போது மாநில அரசின் உரிமைகளை அவை தட்டிப் பறிக்கிறது

புதிய மீன்பிடி மசோதாவில் நிறைய பேருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறது. தற்போது புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம். இது மீனவர்களை பழிவாங்கும் நிலைக்கு கொண்டு செல்லுமே  தவிர அவா்களுடைய பிரச்சனைக்கு தீர்வாகாது

மிக கடுமையான தண்டனைகள் எல்லாம் ஒன்றிய அரசு இந்த மசோதாவில் கொண்டு வந்துள்ளது. இதை எதிர்க்கிறோம். மத்திய அரசு மாநிலங்களுக்கான உரிமையை தர வேண்டும்

அனைத்தையும் நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று ஒன்றிய அரசு நினைக்கக்கூடாது என்று கூறினார்.

Previous Post Next Post