தூத்துக்குடி சப் கலெக்டர் நியமனம் - தமிழ் திரையுலகம் மகிழ்ச்சி !!


நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் சின்னி ஜெயந்த். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் கடந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில்  இந்திய அளவில் சாதனை புரிந்தார். அந்த சிவில் சர்விஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தை பிடித்தார். அந்தத் தேர்வில் மொத்தம் 829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்படத்தக்கது. 

இந்நிலையில் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தற்போது தூத்துக்குடி சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

தமிழ் திரையுலகில் இருந்து முதன் முறையாக ஒரு நடிகரின் மகன் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Previous Post Next Post