தூத்துக்குடியில் நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு


தூத்துக்குடியில் நாளை நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 23ம் தேதி காலை 11 மணி அளவில் காணொளி வாயிலாக நடத்த திட்டமிட்டிருந்தது இதில் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்க என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது  கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post