விளாத்திகுளத்தில் அறநிலையத்துறையின் சார்பில் அமைக்கப்படும் கல்லூரி - கனிமொழி எம்.பி ஆய்வு.!


தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் புதிதாக கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து,  விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு 

சொந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக கல்லூரி இயங்குவதற்கான இடத்தை இன்று திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற  உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு செய்தார் 

இந்த ஆய்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான கீதாஜீவன் எம்எல்ஏ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post