எட்டையாபுரம் பாரதியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பங்கேற்பு.!*


கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் மரக்கன்று நடும் விழா விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பங்கேற்பு

நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி. வி. மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டி மரக்கன்றுகள் நடவு திட்டத்தை தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பாலிடெக்னிக் வளாகத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை அகற்றுவதற்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் பத்தாயிரம் நிதியுதவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஐயப்பன் திமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள் நவநீத கண்ணன் சின்ன மாரிமுத்து பேரூர் கழக செயலாளர் பாரதி கணேசன் கல்லூரி முதல்வர் பேபி லதா உள்ளிட்ட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post