ஊழல் கண்காணிப்பு வாரத்தையொட்டி கோவில்பட்டியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி.!


மத்திய கண்காணிப்பு ஆணையம் அக்.27-ம் தேதி முதல் நவ.2-ம் தேதி வரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மனித சங்கிலி நடத்தப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜி.ஹெக்டர் தர்மராஜ் தலைமையில்

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு. அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை சட்டப்படி செய்வதற்கு கையூட்டு வழங்கினால் அது லஞ்சமாகும். இளைஞர்கள் லஞ்சத்தை தடுக்க முன் வர வேண்டும். லஞ்சம் தொடர்பாக அறிந்தால், உடனடியாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய  பதாகைகளுடன்

கல்லூரி மாணவ, மாணவிகள் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சி.ஜெயஸ்ரீ முன்னிலையில் அனைவரும் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

இதில், லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் எம்.சுதா, இன்னர்வீல் சங்க தலைவர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post