தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க கூட்டம் - எஸ்.பி ஜெயக்குமார் பங்கேற்பு.!


தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2020-2021ம் ஆண்டின் இறுதி தணிக்கை அறிக்கை வாசித்து பதிவு செய்தல், நிகர லாபம் பிரிவினை செய்தல், 2021-2022, 2023ம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டம் அங்கீகாரம் செய்தல், தலைவர் மற்றும் பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவலர் சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகையும், நினைவுப்பரிசும் வழங்கினார்.

இந்த விழாவில் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் கணக்காளர் மாரிப்பாண்டி மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

Previous Post Next Post