தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை சங்கங்களின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!


ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணையை ரத்து செய்திட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி ஊதியம் வழங்க. வேண்டும்.30 ஆண்டு பணியை கருத்தில் கொண்டு சிறப்பு ஊதியம் பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் 

கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் அரசு கருவுலத்தில் வழங்க வேண்டும்.பதிவுறு எழுத்தர்களுக்கு அரசு சலுகைகளையும் பணிகாலத்தில் கருத்தில் கொண்டு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்கவேண்டும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நடவடிக்கை நடைபெற்றது.இதில் முருகன் மாநில பொது செயலாளர் மகேஸ்வரன் மாநில பொருளாளர் செல்வம் மேற்கு மண்டலம் சிறப்பு 

அழைப்பாளர் பழனிவேல் மாவட்டத்தலைவர் சிவசங்கர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் மேற்கு மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மணிவேல் வேல்முருகன் கோவைமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Previous Post Next Post