சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் மணல் திருட்டு - 2 பேர் கைது.!


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுமுகை செம்படா பாளையம்  பகுதியில்வசித்து வரும் காளியண்ணன் மகன் சிவக்குமார் வயது 47, மற்றும் 

அதே ஊரைச் சேர்ந்தஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசன் வயது 37 ஆகிய இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் ஆற்று மணலை தொடர்ந்து கடத்தி வந்துள்ளனர்.

இன்று இந்த பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்டஇருவரும் இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை கொண்டு வந்த போது, பிடித்து விசாரித்ததில், தொடர்ந்து இவர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இவர்கள் மணலை பதுக்கி வைத்த இடத்திற்கு சென்று பார்த்தபோது யூனிட் கணக்கில் மணல்  திருடியது தெரியவந்தது. 

இதனையடுத்து இருவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களின் மீது சத்தியமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் இவர்கள் பதுக்கி வைத்த ஆற்றுமணல் குறித்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் சத்தியமங்கலம் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த சத்தியமங்கலம் வருவாய்  வட்டாட்சியர் ரவிசங்கர், சதுமுகை கிராம நிர்வாக அலுவலர்மதன் குமார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள கடத்தப்பட்ட மணலைகைப்பற்றி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்,

இது பற்றி சத்தியமங்கலம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக, நாராயணசாமி. செய்தியாளர். சத்தியமங்கலம்..

Previous Post Next Post