3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் - செங்கல்பட்டு எஸ்பியாக அரவிந்தன் நியமனம்!


சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரனும், மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை எஸ்பிசிஐடி எஸ்பி அரவிந்தன், செங்கல்பட்டு எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி எஸ்பி மணிவண்ணன், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post