தூத்துக்குடியில் சிறுவனிடம் செல்போனை திருடியவர் கைது.!


தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  முத்துநகர் கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த 16 வயது சிறுவனிடம் இருந்து, லூகாஸ் கிளின்டன் (23)  த/பெ. பிச்சையா புதுத்தெரு தூத்துக்குடி  என்பவர் செல்போனை நேற்று பறித்து  சென்றுள்ளார்.

இதுகுறித்து  16 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சிவராஜா வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி லூகாஸ் கிளின்டனை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 16,000/- மதிப்பிலான செல்போனையும் பறிமுதல் செய்தார்.

Previous Post Next Post