நூல் விலை உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் எதிரில் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப்போராட்டம்

வரலாறு காணாத நூல் விலை உயர்வை கண்டித்தும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்யக்கோரியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்று வரும் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு எம்.எஸ்.எம்.ஆனந்தன்  எம்.எல்.ஏ அவர்களும், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.என்.விஜயகுமார், எம்.எல்.ஏ அவர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்கள். உடன் முன்னாள் மண்டல தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.

Previous Post Next Post