பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் மகிளா காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம்

 


பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து  திருப்பூரில் மகிளா காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம் இன்று நடைபெற்றது.  

திருப்பூர் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில், பாண்டியன் நகர் பகுதியில் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது. 
இந்த பிரச்சாரத்துக்கு  திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சேர்மன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  துணைத் தலைவர் ராமசாமி, மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர் தீபிகா அப்புகுட்டி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சகாயமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக வீடு வீடாக சென்று பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்கள். 
Previous Post Next Post