சேலத்தில் இரத்ததான முகாம்

 


சேலம் அயோத்தியபட்டினம் தினேஷ் மெமோரியல் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலர் மணிபாரதி தலைமையில் ரத்ததான முகாம் அரசு பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 110 நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானத்தை வழங்கினார்கள்.மேலும் சேலம் பிளட் டோனர் குழு இணைந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை வழங்கினார்கள்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காரிப்பட்டி உதவி ஆய்வாளர் வேல்முருகன், காரிப்பட்டி வருவாய் ஆய்வாளர் சந்திர கேசவன், அயோத்தியாபட்டினம்

கிராம உதவி ஆய்வாளர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.மற்றும் வீடுகட்டும் சங்கம் டைரக்டர் மாரிமுத்து,இளம்பரிதி, ஜெயச்சந்திரன்,சதீஷ் குணா,ஹரி,கேசவமூர்த்தி, தினேஷ்குமார்,சேட்டு சூர்யா,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post