சேலத்தில் ஆஷ்னா சில்க்ஸ் பட்டுசேலை கடை திறப்பு விழா- தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்பு


சேலம் ஸ்வர்ணபுரி பகுதியில் ஆஷ்னா சில்க்ஸ் பட்டுச்சேலை கடை திறக்கப்பட்டது.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.கடையின் உரிமையாளரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.கே(எ)ஜி.ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.மேலும் இந்நிகழ்வில் தொழிலதிபர் ராசி சரவணன்.மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆடைகளுக்கு மூன்று நாட்களுக்கு 20% பொதுமக்களுக்கு சிறப்பு தள்ளுபடி இருப்பதாக கடையின் உரிமையாளர் ஆர்.கே(எ)ஜி.ராஜ்குமார் தெரிவித்தார்.

Previous Post Next Post