ஆண்டிபட்டியில் அரசுமருத்துவமனை செவிலியர் அடித்துக் கொலை போலீசார் விசாரணை



ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் அரசு மருத்துவமனை செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் தனியாக வசித்துவரும் செல்வி, இவர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று பணி முடித்து வீட்டுக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அருகில் வசிப்பவர்கள்

சந்தேகமடைந்த,

அக்கம்பக்கத்தினர் ஆண்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வந்த காவல்துறையினர் பூட்டி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் கழுத்து மற்றும் உடல் காயங்களுடன்‌ பிணமாக கிடந்தார், போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி,

மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் சென்று விசாரணைசெய்தார்.அதன்

பின்பு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது,

மேலும் டி.எஸ்.பி தங்ககிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post