தாம்பரம் மாநகராட்சி பசும்பொன் நகரில் சிதிலமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பசும்பொன் நகர்  பகுதியில் சிதிலமடைந்த சாலையை சீர் அமைக்ககோரி சமூக ஆர்வலர் கோரிக்கை

சென்னை பல்லாவரம் அடுத்த மாநகராட்சியின் பம்மல் மண்டல அலுவலகதிற்கு உட்பட்ட பசுபொன் நகர் பகுதியில் உள்ள கெளதமன் சாலை வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கன மழையால் சாலைகள் மிகவும் குண்டும். குழியுமாக சிதிலமுற்று காணபடுகிறது. 

மேலும் அனகாபுத்தூரில் இருந்து பாலாஜி நகர் வழியாக பம்மல், பொழிச்சலூர், பல்லாவரம் செல்லும் முக்கிய இணைப்பு சாலையாகவும் பயன்படுத்தபட்டு வருகின்றனர். 

மேலும் இச்சாலையில் பாதசாரிகள் கடந்து செல்லவும், இருச்சகர வாகனத்தில் பயணிப்போருக்கு மிகவும் சிரமாக உள்ளதாகவும் இதனை உடடியாக சீர்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர.பசுபொன் நகர் கெளதமன் சாலையானது கடந்த 4 மாதங்களுக்கு முன் புதிபித்த சாலை மிக மோசமான நிலையில் உள்ளது பொதுமக்களிடையே வேதனை அளிப்பது குறிப்பிடதக்கதாகும்.


Previous Post Next Post