ராமநாதசுவாமி திருக்கோயிலில் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என காவல் நிலையத்தில் புகார்


ராமேஸ்வரம் ஜன. 29

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த தற்காலிக ஊழியர்கள் 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தனியார் செக்யூரிட்டி சர்வீசில் பணிபுரிந்த நபர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் மற்றும் பிஎஃப் வழங்கப்படவில்லை என ராமேஸ்வரம் திருக்கோயில் காவல் நிலையத்தில் இன்று தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிர்வாகம் கோவில் நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளனர் புகாரைப் பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர்  விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்

Previous Post Next Post