தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்பு.!


தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து மைதானம் திறப்பு புதுப்பிக்கப்பட்ட இருசக்கர வாகன நிறுத்தும் இடம் திறப்பு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பள்ளியின் செயலாளர் செல்வராஜ், நாடார் மகமை துணைச்செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கரமராஜா கலந்து கொண்டு புதியவற்றை திறந்து விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.


தொடர்ந்து பேசுகையில் ஓரு பள்ளியை தொடர்ந்து நடத்துவது என்பது பெரிய விஷயம் அதிலும் இதுபோன்ற பணிகளை செய்வது கூடுதல் சிரமமான பணிகள் தான் இருந்தாலும் 100 ஆண்டுகளுக்கு மேலாக இப்பள்ளி இயங்கி வருகிறது. 

அதுவும் காமராஜர் திறந்து வைத்த பள்ளி என்ற பெருமையோடு ஆசிரியர்கள் குடும்பத்தை மறந்து விருப்ப வெறுப்பின்றி மாணவர்களை படிப்பதற்கு பல அறிவுரைகளோடு கண்டிக்கின்றனர். 

இது எதிர்கால உங்களது வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும் என்ற எண்ணம் தான் தவறாக மாணவர்கள் நினைத்தால் எதிர்கால வாழ்க்கை கேள்வி குறியாகி விடும் மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கேற்ப ஆசிரியர்கள் பணி முக்கியமான பணியாகும். 

பெருந்தலைவர் காமராஜர் தான் படிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் சில குக்கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை பள்ளிகளை அமைத்து படிப்பறிவு இல்லாத மாநிலமாக திகழவேண்டும். என்று பள்ளிகளை உருவாக்கி வாழந்து மறைந்த தலைவர் இன்னும் தமிழகத்தில் எல்லா தரப்பினரிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் காமராஜர்.

அதேபோல் அப்துல்கலாம் சிறிய கிராமத்தில் பிறந்து படிக்க வசதியின்றி படித்து ஜனாதிபதி பதவியில் அமர்ந்தார். இரு தலைவர்களையும் பின்பற்றி மாணவர்கள் பயின்றால் வெற்றி நிச்சயம் என்னை போன்ற பல வணிகர்கள் படிக்க வசதியின்றி பிழைப்புகாக சென்னை சென்றோம். 

இன்று பல இடையூறுகள் இன்னல்களுக்கு மத்தியில் தொழில் செய்து வருகிறோம். ஆனால் படிக்கவில்லையே என்ற வருத்தம் என்னை போன்ற பலருக்கும் உள்ளது படிக்கின்ற பருவத்தில் நல்ல முறையில் படித்தால் கல்லூரியின் வாசல்கள் உங்களை திறந்து வரவேற்கும் அந்தநிலையை உருவாக்க வேண்டும். 

இங்கு விளையாட்டு படிப்பு என அனைத்து கட்டமைப்புகளும் உள்ளன. விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்று இந்த பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

விழாவில் மகமையை சேர்ந்த நிர்வாகிகள் பெத்துபாண்டியன், முருகேசன், தினகரன், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க செயலாளர் சங்கரேஸ்வரன், முன்னாள் செயலாளர் பெத்துராஜ், மற்றும் ராஜேந்திரபிரபு, பட்டுராஜா, வேல்சாமி, மாணிக்கவேல், உத்திரபாண்டி, லிங்கராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Previous Post Next Post