நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாரதி சேவா டிரஸ்ட் சார்பில் சிலம்பாட்ட போட்டிகள்.!


சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவை முன்னிட்டுநெல்லை டவுனில் பாரதி சேவா டிரஸ்ட் சார்பில் சிலம்பாட்ட போட்டிகலில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் உதவி ஆணையர் விஜயகுமார் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார் 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு பாரதி சேவா டிரஸ்ட் சார்பில் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்ட போட்டி நெல்லை டவுனில் நடைபெற்றது. சிலம்பாட்ட போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பத்திரப் பதிவாளர் பாபு நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.  



அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாண்டிதுரை, முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் மற்றும் பாரதி சேவா டிரஸ்ட் நிறுவனர் ஹரிச்சந்திரன், செயலாளர் ஹரிஹர ஐயப்பன் இணைச்செயலாளர் நம்பிராஜன் பொருளாளர் ராகுல்,  துணைப் பொருளாளர் முத்துராமன், 

ஒருங்கிணைப்பாளர்கள் சந்துரு, மகேஷ்  ஆலோசகர்கள் முத்துவேல் ராஜா, மகேஷ், மாதவன் மாணவரணி அஜிஸ் நிர்வாகிகள் ரகுநாத்,தவசி, பெருமாள் மற்றும் கோகுல் சிலம்பாட்ட கழகத்தைச் சேர்ந்த சிலம்பு மாரிமுத்து, செல்வராஜ், ஆனந்த்,  நகராஜன், கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

சிலம்பாட்ட போட்டிக்கான ஏற்பாடுகளை கோகுல் சிலம்பாட்ட கழகத்தினர் செய்திருந்தனர்

Previous Post Next Post