துபாயில் இருந்து சென்னை வந்த பயணிக்கு திடீர் மாரடைப்பு - நடுவானில் உயிரிழந்த பரிதாபம்!

துபாயில் இருந்து ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த நாகப்பட்டினம் பயணிக்கு நடுவானில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சோ்ந்தவர் பஷீா் (47) நேற்று இரவு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் ஏறியுள்ளார்.விமானம்  சென்னையை நெருங்கி போது அவருக்கு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமான பணிப்பெண்கள் அவருக்கு அவசர முதலுதவி செய்து விமானிக்கும் தகவல் கொடுத்தனா். விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு தகவலை கூறி மருத்துவ குழுவை சென்னை தயாா் நிலையில் இருக்கும்படி கூறினாா். இதனையடுத்து சென்னையில் மருத்துவ குழு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் இருந்தது.

அந்த விமானம் இன்று காலை 4.30 மணிக்கு விமானம்  தரையிறங்கியதும் மருத்துவ குழுவினா் விமானத்திற்குள் ஏறி பயணியை பரிசோதித்தனா். ஆனால் பயணி பஷீா் விமான சீட்டில் சாய்ந்தபடி கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதனால் விமானத்தில் இருந்த சகபயணிகளும் விமான ஊழியா்களும் சோகமடைந்தனா்.  இது குறித்து சென்னை விமான நிலைய போலீசாா் உயிரிழந்த பயணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே உயிரிழந்த  நாகப்பட்டினம் நாகூர் பகுதியை சேர்ந்த பஷீர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், பஷீர் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post