திருப்பூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்டரி மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைப் பெற்றது. இது மனித நல்லிணக்கத்தை உருவாக்கும் விதமாக உருவாக்கப்பட்டது.
இதில் இந்து, முஸ்லீம், கிருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை திருப்பூர் ரோட்டரி சங்கத் தலைவி டாக்டர் எஸ்.சிவகாமி ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் இஸ்லாமிய சமய குரு இமாம் அபுதாஹிர் நூராணி மற்றும் அன்னை தெரசா அமைதி இல்லத்திலிருந்து மத போதகர் அந்தோணி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.