இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் மற்றும் 1 விசைப்படகுடன் கைது.!


இராமேஸ்வரம் பிப் 27

இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கைது நடவடிக்கை தற்போது அதிகரித்து வருகிறது கடந்த 25ஆம் தேதி நாகப்பட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்களை இரண்டு விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 

300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகு மற்றும் அதில் இருந்த 8 மீனவர்களை கைது செய்து

 தலைமன்னார் துறைமுகத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் படகுகளை அரசுடமையாக்க படுவது போன்ற செயலால் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Previous Post Next Post