பவானிசாகரில் அட்டை லோடு ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதி, மின் கம்பம் சேதம்

பவானிசாகர் அருகே, டி.என். 40 எல். 8905 என்ற லாரியின் ஓட்டுனர் வினோத் என்பவர் கோவையில் இருந்து புறப்பட்டு, பவானி சாகர்  பேப்பர் மில்லில் பேப்பர் லோடு இறக்க வேண்டி, தொட்டம் பாளையம் தேவாங்கபுரம் என்ற இடத்திற்கு வந்த போது எதிரே பள்ளி வாகனம் வந்ததாகவும் ,அதனால் லாரியை இடது புறமாக ஓரங்கட்டிய போது, இடது புறம் உள்ள மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் உடைந்து விட்டது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மின்கம்பம் மட்டும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் தகவல் அறிந்து உடைந்த மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Attachments area
Previous Post Next Post