பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்- தமிழ்மணி சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி செல்லூர் வழங்கினார்

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இப்பள்ளியில் பயிலும் சுமார் 425 குழந்தைகளுக்கு சிலேடு, ஸ்கெட்ச், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தமிழ்மணி சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி செல்லூர் கே.ராஜூ வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து விளாங்குடி அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், கவுன்சிலர் நாகஜோதி சித்தன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.




Previous Post Next Post