பெட்ரோல் - டீசல் ,எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்



பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் - டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  அதன்படி தூத்துக்குடி தனசேகர் நகரில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில அமைப்பு செயலாளர் பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் சமையல் எரிவாயு சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர். 

இதில் காங்கிரஸ் மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, வடக்கு மாவட்ட பொது செயலாளர் பெத்துராஜ், கிழக்கு மண்டல துணை தலைவர் நேரு, இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர், மற்றும் நிர்வாகிகள் வீரன், சுரேஷ் குமார், காஸ்தூரி, ஜெய மணி, வாசிராஜன், அந்தோணி குரூஸ், ரூஸ்வெல்ட், காசிராஜன், பாலமுருகன், கதிர்வேல் கார்த்திக், கன்னியம்மாள், தங்கம், படேல், முத்து, ரமேஷ், சாரதி, சிவலிங்கம், கவுதம், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post