2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 மற்றும் 3ஆவது அலகுகளில் உற்பத்தி நிறுத்தம்.!

2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 மற்றும் 3ஆவது அலகுகள் மின் உற்பத்தி  நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, கடந்த சில மாதங்களாக 5 அலகுகளிலும் முழுமையாக மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு லட்சம் டன் நிலக்கரி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக, 5 அலகுகளிலும் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று 2 மற்றும் 3ஆவது அலகுகள் திடீரென இன்று நிறுத்தப்பட்டன. பராமரிப்பு பணி காரணமாக இரு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், 2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 அலகுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post