தூத்துக்குடி காங்கிரஸ் பிரமுகர் எலிசபெத் ராஜன் மனிதநேய பணிகள்


தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சோனியாகாந்தி ராகுல்காந்தி தலைமையையேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி மாநில துணைத்தலைவர் சண்முகம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் வழிகாட்டுதல்படி பணியாற்றி வரும் ராஜன் துணைவியார் சமீபத்தில் நடைபெற்ற 

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் 44வது வார்டு காங்கிரஸ் வேட்பாளராக எலிசபெத்ராஜன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இருந்தபோதிலும் மக்கள் பணி தொடர்ந்து ஆற்றி வருகிறார். தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின் பலர் நன்றி சொல்வதற்கு கூட வராத நிலை தமிழகத்தில் இருந்து வருகிறது. 

வெற்றி வாய்ப்பை இழந்த பின்பு தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எலிசபெத்ராஜன் வெற்றிக்காக பணியாற்றி தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் முனியசாமிக்கு எலிசபெத்ராஜன் மருத்துவ செலவிற்கு மனிதநேயத்தோடு நிதி உதவி செய்தார். இப்பணியை மேற்கொண்ட அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தொவிரித்துள்ளனர். 

Previous Post Next Post