தூத்துக்குடி அரசியல் கட்சிகளில் இருப்பது பெருமை அதிலும் மனித நேயத்தோடு பணியாற்றுவது அதைவிட பெருமையானது திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன்,
திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் ஆலோசனைபடி வடக்கு மாவட்ட திமுக விற்குட்பட்ட நிர்வாகிகள் திமுக ஆட்சி அமைவதற்கு முன்பு கொரோனா காலக்கட்டத்தின் போது மனித நேயத்தோடு கீதாஜீவன் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டார்.
அவரை பின்பற்றி பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் உதவி புரிந்தனர். மாநகர திமுக மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், கொரோனா காலக்கட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் வழங்குவதற்கு என்று கீதாஜீவனிடம் 50 ஆயிரம் காசோலை வழங்கினார். பல்வேறு ஏழை எளியவர்களுக்கு அரிசியும் வழங்கி அரசியலில் நேர்மையாக முறையில் பணியாற்றி வரும் அருண்குமார் கோடைகாலத்தை முன்னிட்டு தனது அலுவலகம் முன்பு தினமும் காலையில் பொதுமக்களுக்கு மோரும் மாலையில் குடிதண்ணீரும் தனது நேரடி பார்வையில் வழங்கி வருகிறார். இது போன்று எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல் பணியாற்றுவதை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.