சத்தியமங்கலத்தில் கழுதைப்பால் விற்பனை கனஜோர்!

 சத்தியமங்கலத்தில் 1 லிட்டர் கழுதை பால் 4000/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டு கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபட்டதாக நாடோடிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தில்,கடலூர் மாவட்டம் தொழுதூர்கிராமம், எழுத்தூரைச்சார்ந்த 10 நாடோடிகுடும்பத்தி னர்,கழுதைப் பால் விற்பனைக் காக சத்தியமங்கலத்தில் முகா மிட்டுள்ளனர்.

 கடந்த 3 ஆண்டு களாக கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், தற் போதுதான் விற்பனைக்காக ஊரைவிட்டு. நாடோடிகளாக கிளம்பியதாகவும், தொடர்ந்து ஊர் ஊராக, கழுதைப் பால் விற்பனையில் ஈடுபடபோவதா கவும் தெரிவித்தனர்.

தங்கள் மூதாதையர் காலந்தொட்டு, 3 தலைமுறைகளாக கழுதைப் பால் விற்பனையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும், தற் போது 250 மிலி கழுதைப் பால் ரூ 1000|-க்கு விற்பனை செய் வதாகவும், ஒரு சிலர் தங்கள் குழந்தைக்கு புகட்ட கேட்டால் 1 சங்குபால் ரூ50|-க்குவிற்பனை  செய்வதாகவும் தெரிவித்தனர்.

விற்பனையற்ற காலங்களில் தாங்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். 

Previous Post Next Post