அமமுக சார்பில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி.!


தூத்துக்குடி டூவிபுரம் பத்தாவது தெருவில் முப்பதாவது வட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீரபுத்திரன், வட்டச் செயலாளர் காசிலிங்கம், வட்டச் செயலாளர் ஆறுமுகம், வட்ட பொருளாளர் சுப்பையா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post