கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி 6 பேர் படுகாயம்.!


திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் சென்ற ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டப சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர் இதில் தன்ராஜ்(35) என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

மேலும் 4 பேர் லேசான காயமடைந்துள்ளனர் விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post