ராமேஸ்வரத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை  மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது இதை ராமேஸ்வரம் ரோட்டரி சங்க தலைவர் ஸ்ரீதர் செயலாளர் தனபாண்டியன்  கொடி அசைத்து பேரணியை துவங்கி வைத்தார் 

இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீ ரஞ்சனி நாட்டு நலப்பணி திட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளி அலுவலர் சுகன்யா தேவி தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி ஜூனியர் ரெட் கிராஸ் அலுவலர் தினகரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Previous Post Next Post