வேலூர் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு போலீசாருக்கு பாதுகாப்பு பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி


வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது இதையொட்டி மாவட்டம் முழுவதும் 1.500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துப்பட உள்ளனர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உள்ள போலீசார் ஆயுதப்படை போலீசார் அதிவிரைவு படை மற்றும் கம்போண்டோ படை போலீசார் ஊர்காவல் படையினருக்கு 

வேலூர் நேதாஜி மைதானத்தில் பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்தது இதில் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார் அப்போது அவர் கூறுகையில் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் 

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் அந்தந்த பகுதியில் உள்ள சூழ்நிலை குறித்து அந்தந்த காவல் நிலையத்திற்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும் ஒரு போலீசாருக்கு 2. அல்லது 3. விநாயகர் சிலை பாதுகாப்பு பணி வழங்கப்படலாம் 

எனவே அடிக்கடி அந்த சிலைகளை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் ஊர்வலம் நடைபெறும் போது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார் இது குறித்து நிருபர்களுக்கு எஸ் பி ராஜேஷ் கண்ணன் அளித்த பேட்டியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி  பாதுகாப்பு பணியில் 1.500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் 

வேலூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளது இந்த விழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 62 பேரிடம் குற்ற செயல்கள் ஈடுபட மாட்டோம் என பிரமாண்ட பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதையில் 188 கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன மேலும் சில இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன சிலை கரைக்கும் இடத்தில் கண்கணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது 

அவற்றின் மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்படும் மேலும் 3 டிரோன் கேமராக்கள் மூலம் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதை கண்காணிக்கப்படும் இது தவிர மொபைல் கமென்ட் கன்ட்ரோல் யூனிட் வாகன ஒன்றும் கண்காணிப்பு பணியில் புதிதாக ஈடுபடுத்தப்பட உள்ளது 

அந்த வாகனத்தில் 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் கேமராக்கள் உள்ளது ஊர்வலம் பாதையில் அந்த வாகனமும் செல்லும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை மேப்பிங் சிஸ்டம் மூலம் கண்காணித்து வருகிறோம் என்றார்

Previous Post Next Post