பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். 

வடகிழக்கு பருவமழை துவங்கும் காலம் நெருங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான மின் மற்றும் எரிபொருள் நிரப்பி இயங்கக்கூடிய மோட்டார்கள் அனைத்தும் பழுது பார்த்து இயக்க நிலைக்கு தயார் படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர், உதவி பொறியாளர், நிர்வாக அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.

Previous Post Next Post