தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு பதிலாக மூடி மறைக்கிறார்கள் - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

 திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கோவை கார் வெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.கோட்டையில் உள்ளவர்கள் தீவிரவாதிகள் செயல்களை கண்காணிக்க தவறிய நேரத்தில் கோட்டை ஈஸ்வரன் தான் மக்களை தீபாவளி சமயத்தில் காப்பாற்றி உள்ளார்.இந்த சம்பவத்தினை பார்வையிட டிஜிபி உடனே வருகிறார். அது பாராட்டுக்குரியது. 

மிகச்சிறந்த அதிகாரிகளை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நியமித்தார்கள். ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையானது தமிழ்நாடு காவல் துறை என்பதில் ஐயமில்லை. ஆனால் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இங்கு வந்தாலும் இவர்களுக்கு அடிபணிந்து தான் இருக்கும் நிலை உள்ளது.தீவிரவாத செயல்களை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீரில் பெரும் பகுதி இன்றைய அதிரடி நடவடிக்கைகளால் அமைதி பூங்காவாக மாறி உள்ளது. மிக தீவிர நடவடிக்கைகள் எடுத்தால் தான் தீவிரவாதத்தை தடுக்க முடியும்.

 தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு பதிலாக மூடி மறைக்கும் வேலையை செய்து வருகின்றனர். இது அவர்களின் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் வித்திடுகிறது.இந்த போக்கால் திமுக முற்றிலும் அழிந்துவிடும் என்பதை திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.எடுப்பார் கைப்பிள்ளையாக காவல் துறை இருக்க கூடாது. ஒளிவு மறைவு இல்லாமல் கைப்பற்றப்பட்ட வெடி மருத்துகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்து, தீவிரவாதத்தை அடக்கி ஒடுக்குவது தான் தமிழகம் அமைதி பூங்காவாக விளங்க வழி.

எவ்வளவு வெடி மருத்துகளை கைப்பற்றினோம் என சொல்லாமல் மறைத்து வருகின்றனர்.அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விசாரணை நடைபெற வேண்டும்.இரண்டாவது பெரிய தொழில் நகரமான கோவையை சீர்குலைத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் நிலை குலையும்.மத்திய அரசு தலையிடும் சூழல் ஏறபடும். பின்னர் மாநில சுயாட்சி என தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போல அமையக்கூடாது.

தமிழக உளவுத்துறை கண்காணித்து இருந்தால் இதனை முளையிலேயே கிள்ளி எரிந்து இருக்கலாம். தமிழகத்தில் சாதகமான ஆட்சி உள்ளது என செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு இல்லை என தமிழக அரசு நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளது.டிஜிபி முதலில் ஒன்றை சொன்னார். பின்னர் சிறிய சிறிய வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டார்கள் என சொல்கிறார். ஏன் வெடி மருந்து அளவை வெளியிடுவதில் தயக்கம். 1.5 டன் கைப்பற்றியதாக தகவல் கிடைத்துள்ளது. திமுக அரசியல் இயக்கமாக வெற்றிகரமாக இயங்க தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். வரலாறு தவறுகளை திருத்திக் கொள்ளாமல் உள்ள கட்சி திமுக‌‌. இவ்வாறு சி. பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.இந்த பேட்டியின் போது, மாவட்ட தலைவர் செந்தில்வேல் உடனிருந்தார்.

Previous Post Next Post