சேலம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை உள்பட 15 மாவட்டங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post