தூத்துக்குடி :மாப்பிள்ளையூரணி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் - தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.!

 

தூத்துக்குடி தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும்  மாப்பிள்ளையூரண ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் தலைமையில் மாப்பிள்ளையூரணியில் 130 தூய்மை காவலர்களுக்கு சேலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணகுமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆம்ஸ்ட்ராங், சதீஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் பிரபாகர், இளைஞர் அணி ரமேஷ், குணா, பாலானந்த், குமார், சக்திபாலன், கௌதம், தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post