மின்னல் வேகத்தில் ஆட்டோவில் மோதிய பைக்...கல்லூரி மாணவர் பலி... சிசிடிவி காட்சி

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.மின்னல் வேகத்தில் சென்ற பைக் ஆட்டோ மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சௌடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மகன் அமிர்தவாசன்(19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று அமிர்தவாசன்  காங்கேயம் - திருப்பூர் சாலையில் சென்ற போது நீலக்காட்டுப் புதூர் பிரிவு அருகே சென்றபோது, சாலையில் திரும்பிய ஆட்டோ மீது வாலிபர் ஒட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமிர்தவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது காண்போரை அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக, ஆட்டோ சாலை பிரிவில் மெதுவாக திரும்புவதும், அப்போது மின்னல் வேகத்தில் பைக் மோதும் காட்சிகள் அங்குள்ள கடை ஒன்றில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

Previous Post Next Post