எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்.!

 

2023ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பை இந்தியா உட்பட பல வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள், தமிழர்கள் கொண்டாடுவது வழக்கமான நடைமுறையில் இருந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டு பழைய நட்பையும், புத்தாண்டில் புதுப்பித்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூங்கொத்து  கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post